Tuesday, April 7, 2020

குமரன் உதயம்

நெய் நந்தி தான் மகா சனிப்பிரதோஷத்தன்று தோன்றினானோ
நெஞ்சம் நெகிழவே மகிமை கொண்ட அமுதன் (முருகன்) அருளினானோ
சுகப்பிரசவத்தில் தான் பிறப்பேன் என்று போராடிப் பிறந்தானோ
சுகம் உண்மையில் எது என்று உணர்த்தவே உதித்தானோ

ஆத்தா அப்பச்சியின் அன்பில் நனைந்திட முகிழ்த்தவனோ
ஆயா ஐயா நேசத்துடன் அணைத்திட மகிழ்பவனோ
அப்பத்தா ஐயா அன்றாடம் நினைத்திட மகவாய்ப் பிறந்தானோ
அத்தை மக்களும் தாய் மாமனும் திளைத்திடக் கண் திறந்தானோ

பாட்டி ஆயா ஐயா பெருமிதம் கொள்ள
தாய் வழிப் பாட்டன்மார்கள் பாசம் அள்ள
ஈன்றவள் ஆனந்தக் கண்ணீர் சிந்த
பெற்றவன் பூரிப்புடன் கரங்களில் ஏந்த

தாலாட்டு இசையால் இல்லம் நிறைந்திட
வாலாட்டும் உன் குறும்புகளை உள்ளம் விரும்பிட
உன் கரையும் (அழுகையும்) செவியில் இன்னிசையாய் ஒலிக்குதே
 இன்பப் புயல் கரை கடந்து தொடர் மழையாய்ப் பொழியுதே!


--------------
7.3.2020 மகா சனிப் பிரதோஷம் நாள்
முகிழ்த்தல் என்றால் தோன்றுதல்
மகவு என்றால் குழந்தை