Saturday, May 22, 2021

மலரும் மணமும்

மலரை (திரு)மணம் கொண்டேன்!

மகிழ்விக்க மனம் கொண்டேன்!

மலரும் நினைவுகளில்

மனமும் நிறையக் கண்டேன்!

 

மென்மேலும் மகிழ்வோம்!

 

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் இருந்து முத்து எடுப்பதைப் போல்
நீ எனக்குள் இருந்து சிறப்புக்களை வெளிக்கொணர்வது அழகு!


மென்மேலும் சிறந்து வாழ்வோம்!


பேரன்புடன்,
முத்து

Sunday, May 16, 2021

மனைவிக்கு திருமணநாள் வாழ்த்து

பாடல் நான் பாெருள் நீ

நடனம் நீ நளினம் நான்

நிழற்படம் நான் நினைவுகள் நீ

நிறைகுடம் நீ நதிநீர் நான்


பயிர் நான் வேர் நீ

உயிர் நீ உணர்வு நான்

மாக்கோலம் நான் புள்ளிகள் நீ

மணக்கோலம் நீ மங்கலியம் நான்


ஓவியம் நான் ஒய்யாரம் நீ

காவியம் நீ கருப்பொருள் நான்

தவம் நான் வரம் நீ

தாரம் நீ ( - உன்) சாரம் நான் 


___________

 


பொருள்:  

நளினம் = grace  

காவியம் = epic  

கருப்பொருள் = theme  

ஒய்யாரம் = அழகு  

சாரம் = essence

மங்கலியம் = தாலி

 

முதல் வரி நான் மனைவியைப் பற்றிக் கவிதை எழுதுவதைக் குறிக்கிறது.    

 

இரண்டாவது வரி இருவரும் சேர்ந்து ஆடிய நடனத்தைக் குறிக்கிறது.    

 

மூன்றாவது வரி அவள் பரிசு தந்த நிழற்படங்களைக் குறிக்கிறது.       

 

நான்காவது வரி "நிறைகுடம் ததும்பாது" என்ற பழமொழிக்கேற்ப அவள் ஒரு நிறைகுடம் - அதாவது அலட்டிக் கொள்ளாதவள் என்பதை குறிக்கிறது. 

 

ஆறாவது வரி இருவரும் சேர்ந்து பொங்கல் பானையில் மாக்கோலமிட்டதைக் குறிக்கிறது.    

 

ஒன்பதாவது வரை நான் வரைந்த குடும்ப ஓவியத்தைக் குறிக்கிறது.    

 

பதினோராவது வரி "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியைக் குறிக்கிறது.